இதோட திமுகவின் ஐ.டி. விங்க் நிறுத்திக்கணும்.. இல்லை... எச்சரிக்கை விடுத்த கே.டி. ராஜேந்திர பாலாஜி! - Seithipunal
Seithipunal


சிவகாசியில் இன்று செய்தியர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, “முருக பக்தர்கள் மாநாடு ஆன்மீக எழுச்சி மாநாடாக அமைந்தது. இதனை பார்த்துத்தான் தி.மு.க. கூட்டணிக்கு பயமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளன” எனக் கூறினார். அதே நேரத்தில், அண்ணா மற்றும் பெரியாரை விமர்சிக்கும் விதத்தில் வீடியோ வெளியானது வருத்தமளிப்பதாகவும், அப்படி ஓர் விடயத்தை தவிர்த்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

“தமிழகத்தில் பொதுமக்கள் உயர் பதவிகளில் இருக்கும் வாய்ப்பை பெற்றதற்கு அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களே காரணம். அவர்களை விமர்சிக்கப் பாவிக்கப்படும் விதமான வீடியோக்கள் மக்கள் மனதில் புண் ஏற்படுத்தும். ஆன்மீக நிகழ்வுகளிலும் மத விழாக்களிலும் அனைத்து மதங்களையும் மதிக்கும் அணுகுமுறையுடன் அ.தி.மு.க. எப்போதும் செயல்பட்டுள்ளது. நாம் எப்போது மக்களுக்காகவே இருக்கிறோம். அதனால்தான் இந்நிகழ்வில் நாகரீகத்துடன் எதையும் கூறாமல் அமைதியாக இருந்தோம்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிருப்தியில் உள்ளன; கூட்டணி உடையும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். “விஜய் போன்றவர்கள், திமுக ஆட்சியை எதிர்க்க விரும்பினால், அ.தி.மு.க.வோடு கைகோர்ப்பதே சிறந்த தீர்வாக இருக்கும். எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அ.தி.மு.க.தான் திமுகவுக்கு உண்மையான எதிரணி” என்றார்.

திமுகவின் ஐ.டி. பிரிவு தனது மூர்க்க செயல்களை நிறுத்த வேண்டும்* என்றும், எடப்பாடியை விமர்சிப்பவர்கள் பின்னடைவதே நேர்மையான விளைவாக இருக்கும் எனவும் கே.டி. ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை விடுத்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK KDR condemn to murugar manadu


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->