தொகுதி பங்கீடு: அ.தி.மு.க - தே.மு.தி.க இடையே இன்று 3 ஆம் கட்ட பேச்சு வார்த்தை.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் அ.தி.மு.க - தே.மு.தி.க இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதி பங்கீடு குறித்து ஏற்கனவே 2 கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில் இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

இரு கட்சிகளுக்கும் இடையே இன்று மாலை தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தே.மு.தி.க. 3 மக்களவை, 1 மாநிலங்களவை சீட் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK DMDK 3rd phase talks today evening


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->