தொகுதி பங்கீடு: அ.தி.மு.க - தே.மு.தி.க இடையே இன்று 3 ஆம் கட்ட பேச்சு வார்த்தை.!
ADMK DMDK 3rd phase talks today evening
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க - தே.மு.தி.க இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொகுதி பங்கீடு குறித்து ஏற்கனவே 2 கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில் இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இரு கட்சிகளுக்கும் இடையே இன்று மாலை தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தே.மு.தி.க. 3 மக்களவை, 1 மாநிலங்களவை சீட் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
ADMK DMDK 3rd phase talks today evening