திடீர் பரபரப்பு.. வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த மர்ம நபர்.. அதிமுக, பாஜகவினர் சாலை மறியல்.!!
admk and bjp protest in thenkasi
தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப் பதிவு முடிந்தது வாக்கு வாக்குகள் பதிவான இயந்திரங்கள் பெட்டிக்குள் வைத்து மூடி சீல் வைக்கப்பட்டது. அதன்பிறகு அவை போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
நேற்று முன் தினம் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மின்னணு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே புளியங்குடியில் பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் மர்ம நபர்கள் நுழைந்ததாக புகார் தெரிவித்து, புளியங்குடி - கோவில்பட்டி சாலையில் அதிமுக, பாஜக கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
admk and bjp protest in thenkasi