ரஜினி, விஜய் வரிசையில் சிம்பு.! மீம்ஸ் ஜாம்பவான்களுக்கு நல்ல கண்டன்ட் கன்ஃபார்ம்.!
actor simpu statement
சிம்பு தலைமை ரசிகர் மன்ற இளைஞர் வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி, கலை இலக்கிய அணி மூலம் மன்றத்தின் பணிகளை விரிவுப்படுத்த டி.வாசு தலைமையில், சென்னையில் விரைவில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதிப்பும் பேரன்பும் கொண்ட என் இரத்தத்தின் இரத்தமான உறவுகளே வணக்கம். நீண்ட நாளாக இயற்கையின் செயல்களால், உங்களிடம் நேரடியாக உறவாடாமல், தொலைபேசி வாயிலாக உறவு கொண்டோம்.
மேலும் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி, கலை இலக்கிய அணியின் மூலம் மன்றத்தின் பணிகளை விரிவுபடுத்த உள்ளோம். சிம்பு தலைமை ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் டி.வாசு தலைமையில் சென்னையில் விரைவில் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.
ஆகையால், மாநில, மாவட்ட, வட்ட, பொறுப்பாளர்கள் நமது தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கலந்து கொள்ள பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.(தேதி பின்னர் அறிவிக்கப்படும்)" என்று அந்த அறிக்கையில் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு திடீரென அறிக்கை விட்டு இருப்பது அரசியலுக்கு வருகிறாரோ என்று சமூகவலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட., ஆனால் அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.
அரசியலுக்கு வருவேன் என்று சொல்லியே காலத்தை ஓட்டிய சூப்பர் ஸ்டார் பாணியை விஜய் பயன்படுத்தி காமெடி ஆகியுள்ள நிலையில், தற்போது நடிகர் சிம்புவும் அதை கையில் எடுத்துள்ளார் போல. வரும்...... ஆனா வராது......, ஆனா மீம்ஸ் ஜாம்பவான்களுக்கு நல்ல கண்டன்ட் கன்ஃபார்ம்.