ஹரோ ஹரா... முதல் முறையாக பிரதமர் மோடி போட்ட டிவிட்.! அதுவும் தமிழில்.!  - Seithipunal
Seithipunal


முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம் என்று, பிரதமர் நரேந்திர மோடி ஆடி கிருத்திகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இன்று தமிழகம் முழுவதும் உள்ள 'தமிழ் கடவுள் முருகன்' கோயில்களில் 'ஆடி கிருத்திகை' விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

கடந்த இரு வருடங்களாக கொரோனா கட்டுப்பாடு இருந்த காரணத்தினால் முருகன் கோயில்களில் 'ஆடி கிருத்திகை' விழா காலை இழந்து காணப்பட்ட நிலையில், இந்த வருடம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு பிரதமர் மோடி முதல் முறையாக வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதுவும் தமிழ் மொழியிலேயே தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவரின் ட்விட்டர் பதிவில், "ஆடிக்கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம். 

நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும்" என்று பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aadi krithigai PMmodi wish


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->