பழங்குடியின மாணவி படைத்த சாதனை! ரூ. 2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய த. வெ.க தலைவர் விஜய்...! - Seithipunal
Seithipunal


 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது விழாவில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. சார்பில் பரிசளிப்பு நடத்தப்பட்டு வருகிறது.இதில் இந்தாண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது.

இது கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று முன்தினம் 32 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியிலுள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.இதில் த.வெ.க. விருது வழங்கும் நிகழ்ச்சியின் 4-வது கட்ட விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.இந்நிலையில் JEE தேர்வில் தேர்ச்சி பெற்று IITயில் உயர்கல்வி பயில தேர்வாகியுள்ள சேலத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஷ்வரிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகையாக த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார்.

விஜய்:

அப்போது விஜய் தெரிவித்ததாவது,"ராஜேஸ்வரி வீட்டில் மின்சாரம் கூட இல்லை. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்துள்ளார். அவருக்கு விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசை. கண்டிப்பாக ஆவீங்க. என்னுடைய wishes. all th best "என்று தெரிவித்து அவருக்கு பேனாவை பரிசளித்தார்.

ராஜேஷ்வரி:

இதைத்தொடர்ந்து பேசிய மாணவி ராஜேஷ்வரி," நான் எப்படி படித்து இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்று எல்லோரும் பார்த்து இருப்பீங்க. நான் இந்த மேடைக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு சந்தோஷமாக இருக்கு. நீங்களும் என்னை மாதிரி ஆக வேண்டும் என்றால் அதற்கு இருக்கக்கூடிய ஒரே வழி கல்வி மட்டும்தான் அதை விட்டுறாதீங்க. all the best girls "என்று தெரிவித்தார்.

விஜய் சாரை பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ரொம்ப நாள் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. சார் எனக்கு cash கொடுத்து இருக்கிறார்கள். ரொம்ப சந்தோஷம். சாருக்கு ஒரு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் "என்று தெரிவித்தார்.

மேலும், மேடையில் உணர்ச்சிவசப்பட்ட மாணவியை த.வெ.க. தலைவர் விஜய் ஆறுதல்படுத்தினார்.இதற்கு முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவி ராஜேஸ்வரியை நேரில் அழைத்து பாராட்டி, பழங்குடியினர் நலத்துறையின் தொல்குடித் திட்டத்தின் கீழ் ரூ.5.73 லட்சம் மதிப்பிலான வீடு ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையை வழங்கினார். மேலும், ரூ.70,000 மதிப்பிலான மடிக்கணினியையும் வழங்கி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A tribal student has created a record Rs 2 lakhs as an incentive T VK leader Vijay


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->