5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்.. ஆட்சி பிடிக்கப் போவது யார்.? வெளியான கணிப்பு.! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது இன்று வாக்குகள் எண்ணப்படுகிறது. 

உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகள், பஞ்சாபில் 117 தொகுதிகள், உத்தரகண்டில் 70 தொகுதிகள், 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகள் என மொத்தம் 690 தொகுதிகளுக்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றது. 

இந்நிலையில் 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களில் இன்று காலை முதல் எண்ணப்படுகிறது. மதியத்திற்குள் யார் ஆட்சியை பிடிப்பது என்ற விவரம் தெரியவரும். இதனுடைய ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்பது குறித்த கருத்துக்கள் வெளியாகி உள்ளது. லோக்நிதி - சிஎஸ்டிஎஸ் இந்த கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக கூட்டணி 40 சதவீத வாக்குகள் கிடைக்கும். சமாஜ்வாடிக் 35 சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்புண்டு, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 15 வாக்குகள் கிடைக்கலாம். காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 3 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும். பிற இணைந்து 4 சதவீத வாக்குகள் பெறும். உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றியை கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. 

பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சிக்கு 43 சதவீத வாக்குகள் கிடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 26 சதவீத வாக்குகள் கிடைக்கும். பாஜக கூட்டணிக்கு 7 சதவீத வாக்குகள் கிடைக்கும்.  அகாலிதளம் கட்சிக்கு 20 சதவீத வாக்குகள் கிடைக்கும். 

கோவாவில் பாஜகவிற்கு 32 சதவீத வாக்குகள் கிடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 29 வாக்குகள் கிடைக்காமல். திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு 14 வாக்குகள் கிடைக்கும். ஆம் ஆத்மிக்கு 7 சதவீத வாக்குகள் கிடைக்கும். 

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 43 சதவீத வாக்குகள் கிடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 38 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 states election results


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->