"மாமல்லபுரம் கோவளத்தில் தென்மண்டல மாநாடு!": மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் 31-வது தென் மண்டலக் குழு கூட்டம் தீவிர விவாதம்!
31st Southern Zonal Council Meeting Commences in Kovalam Chaired by Union Home Minister Amit Shah and CM Vijay
சென்னை அருகே உள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் 31-வது தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு மற்றும் தென் மண்டலக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைத் தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் நேரில் வரவேற்றனர். மாநாடு நடைபெறும் விடுதிக்குச் சென்ற மத்திய அமைச்சரை, தென் மண்டல கவுன்சிலின் துணைத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்துச் சுமுகமாக வரவேற்றார்.
மாநாட்டில் பங்கேற்றுள்ள தென்மாநிலத் தலைவர்கள்
மத்திய உள்துறை அமைச்சரின் தலைமையில் நடைபெறும் இக் உயர்மட்டக் கூட்டத்தில் தென்னிந்திய மாநிலங்களின் முக்கியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்:
மாநில முதல்வர்கள் & பிரதிநிதிகள்: ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா துணை முதலமைச்சர் மல்லுப்பட்டி விக்ரமர்கா, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், கேரள முதலமைச்சர் சதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
யூனியன் பிரதேச அதிகாரிகள்: புதுச்சேரி முதலமைச்சருக்குப் பதிலாக அம்மாநிலத் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், அந்தமான்-நிக்கோபார் தீவுகள் துணை நிலை ஆளுநர் மற்றும் லட்சத்தீவு உயர் அதிகாரிகள் இம் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
முக்கிய விவாதக் களங்கள் & தமிழ்நாட்டின் முன்னெடுப்புகள்
நாட்டின் வளர்ச்சிக்கு 'பாரதக் குழு' (Team India) என்ற தொலைநோக்குப் பார்வையுடன், மத்திய-மாநில அரசுகளின் உறவை மேம்படுத்தவும் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தவும் இக் கூட்டம் நடத்தப்படுகிறது.
கொள்கை விவாதங்கள்: மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, புதிய தொழில் முதலீடுகள், கல்வி மற்றும் சுகாதாரம் சார்ந்த மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விரைவாக விசாரித்துத் தண்டனை வழங்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் முக்கியக் கோரிக்கைகள்: மாநிலங்களின் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், காவிரி நதிநீர்ப் பங்கீடு, மேகதாது அணை சர்ச்சை மற்றும் கர்நாடகாவில் தமிழ் மீன்பிடித் தொழிலாளர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் உரிய நியாயம் கோரி தமிழ்நாட்டின் சார்பில் பலமான கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளன.
English Summary
31st Southern Zonal Council Meeting Commences in Kovalam Chaired by Union Home Minister Amit Shah and CM Vijay