திடீர் திருப்பம்.. பாஜகவுக்கு பெரும் பின்னடைவு.. ஆட்டத்தை தொடங்கிய உத்தவ் தாக்கரே.!!
22 mlas will switch to Shinde team to Uddhav Thackeray team
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்து வந்த நிலையில் சிவசேனாவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை காரணமாக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்எல்ஏக்கள் அணி திரண்டு உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக செயல்பட்டனர்.
இதனை தொடர்ந்து சிறப்பு சட்டப்பேரவை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் அதற்கு முன்னதாகவே தனது முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டார்.
![](https://img.seithipunal.com/media/Eknath Shinde Shiv Sena-s8yhk.png)
துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த தேவிந்திர பட்னாவிஸ் பதவியேற்று கொண்டார். இதனைத் தொடர்ந்து சிவசேனா கட்சியும், சின்னமும் ஏக்நாத் ஷிண்டே வசமானது. இதனால் உத்தவ் தாக்கரே உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி பாஜகவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தான் ஏக்நாத் ஷிண்டே பக்கம் இருக்கும் 22 எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரே பக்கம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தவ் தாக்கரேவின் தலைமையிலான உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சியின் பத்திரிக்கையான சாம்னாவில் ஒரே கூட்டணியில் இருந்தாலும் பாஜவினர் ஏக்நாத் ஷிண்டே அணியினரை மதிப்பதே இல்லை, மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகின்றனர் என கட்சியின் முக்கிய தலைவர்கள் புலம்பி வருகின்றனர்.
![](https://img.seithipunal.com/media/bjp election-evqut.png)
ஏக்நாத் ஷிண்டே தரப்பில் 22 எம்எல்ஏக்களும், 9 எம்பிக்களும் கடும் அதிருப்தியில் இருப்பதால் அவர்கள் விரைவில் உத்தவ் தாக்கரே பக்கம் வரவுள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் தற்போது மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிவசேனாவில் உத்தவ் தாக்கரேவின் அதிகாரத்தை கலைத்து, ஏக்நாத் ஷிண்டேவை பாஜக தனக்கு ஆதரவாக வளர்த்துவிட்டதாக சிவசேனா இரண்டாக உடைந்த போது பேசப்பட்டது. ஆனால் தற்பொழுது பாஜவின் செயல்பாடுகளுடன் முரண் ஏற்பட்டு ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்த 22 எம்எல்ஏக்கள் மற்றும் 9 எம்பிக்கள் உத்தவ் தாக்கரே பக்கம் வருவது பாஜவின் திட்டத்தில் பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
English Summary
22 mlas will switch to Shinde team to Uddhav Thackeray team