'செம்பு நீர் எல்லோருக்கும் நல்லதா'...? - மருத்துவர்கள் எச்சரிக்கை, மறைந்திருக்கும் ஆபத்துகள் வெளிச்சம்...!
Is copper water good for everyone Doctors warn hidden dangers revealed
செம்புப் பாத்திரங்களில் தண்ணீர் சேமித்து அருந்துவது பாரம்பரியமாக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடைமுறையாகக் கருதப்பட்டாலும், அது அனைவருக்கும் ஏற்றது அல்ல என்பதை மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, தண்ணீரின் நிறம் பச்சை அல்லது கருமைத் தோற்றமாக மாறியிருந்தால், அது செம்பின் ஆக்சிடேஷன் அல்லது வேதிப்புரிய மாற்றங்களின் விளைவாக இருக்கலாம் என்பதால், அத்தகைய நீரை அருந்துவது தவிர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பால், தயிர், பழச்சாறு போன்ற அமிலத் தன்மை கொண்ட உணவுப் பொருட்களை செம்புப் பாத்திரங்களில் சேமிப்பது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வேதிப்புரிய எதிர்வினைகளை தூண்டக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மரபணு சார்ந்த அரிய நோயான ‘வில்சன் நோய்’ கொண்டவர்களுக்கு உடலில் செம்பு அதிகமாகச் சேரும் தன்மை இருப்பதால், செம்பு நீர் அருந்துவது அவர்களின் உடல்நிலையை மோசமாக்கும் அபாயம் உள்ளது.
இது கல்லீரல் மற்றும் மூளை போன்ற முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.அதேபோல், சிறுநீரகக் கோளாறுகள் உள்ளவர்கள் உடலில் தாதுக்கள் சமநிலையை பராமரிக்க சிரமம் அனுபவிப்பதால், செம்பு கலந்த நீர் அருந்துவது இரத்தத்தில் செம்பின் அளவை அதிகரித்து, சிறுநீரகங்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
மேலும், அடிக்கடி அமிலத்தன்மை, வயிற்றுப்புண்கள் அல்லது செரிமான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது பொருத்தமாக இருக்காது. வயிற்று எரிச்சல், வாயுத்தொல்லை, குமட்டல், வாந்தி போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.குழந்தைகளின் செரிமான அமைப்பு மிகவும் நுணுக்கமானது என்பதால், அவர்களுக்கு செம்பு நீர் அளிப்பதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
இல்லையெனில், கல்லீரல் மீது தேவையற்ற அழுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கூட செம்பு நீர் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உடலின் தாதுச் சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள், தாயும் குழந்தையும் பாதிக்கப்படக்கூடிய நிலையை உருவாக்கக்கூடும்.
அதிகப்படியான செம்பு உட்கொள்ளப்படும்போது தலைவலி, மயக்கம், வாந்தி, வயிற்றுவலி போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, செம்புப் பாத்திரங்களை முறையாக பராமரித்து பயன்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். எலுமிச்சைச் சாறு அல்லது இயற்கை சுத்திகரிப்பு முறைகள் மூலம் அவற்றை சுத்தம் செய்து, நீரை நீண்ட நேரம் சேமித்து வைக்காமல் 6 முதல் 8 மணி நேரத்திற்குள் பயன்படுத்துவது சிறந்ததாகும்.
இதனால், செம்பு நீர் பல நன்மைகளை கொண்டிருந்தாலும், அது யாருக்கு ஏற்றது, யாருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை அறிந்து, அளவோடு மற்றும் முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்துவது அவசியம் என்பதை மருத்துவ வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Is copper water good for everyone Doctors warn hidden dangers revealed