முகத்தில் இருக்கும் வெண்புள்ளியை நீக்க எளிமையான வழிமுறைகள்.!! - Seithipunal
Seithipunal


அழகை கெடுக்கும் விஷயங்களில் முக்கிய பங்கை பிடிப்பது வெண்புள்ளிகள் தான். முக அழகை பாழாக்கும் இந்த வெண்புள்ளி ஆண், பெண் என இருவரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சினை ஆகும்.

இது சருமத்தின் மென்மையை பாதிப்பதோடு, அசிங்கமான தோற்றத்தை அளிக்கும். இதைப் போக்குவதற்கு ஏராளமான பொருட்கள் மார்க்கெட்டுகளில் கிடைத்தாலும், அவற்றின் செயல்பாடுகள் என்னவோ சிறப்பாக அமைவதில்லை.

இயற்கை முறையில் இதனை கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றி பயன் அடையவும். இயற்கை முறைகளை கொண்டு தீர்வு காணும் பொழுது எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம். 

ஒரு பௌலில் ஓட்ஸ் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி, அப்பகுதியை மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், வெள்ளைப்புள்ளிகள் வருவதைத் தடுக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Beauty tips for remove face whitening


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->