கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற மனைவி..!! மன உளைச்சலில் கணவன் தற்கொலை..!! - Seithipunal
Seithipunal


மனைவி பிரிந்த சோகத்தில் டிரைவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி நவதி ஸ்ரீதேவி பகுதியில் வசித்து வருபவர்  ராஜேந்திரன். இவருக்கு திருமணமாகி மனைவியும் குழந்தையும் உள்ளனர். ராஜேந்திரன் அந்த பகுதியில் கார் ஒட்டுனராக பணியாற்றி வருகிறார்.

கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனால் இருவருக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால், ராஜேந்திரன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோக்த்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A man commited to suicide Due to family Issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->