மது அருந்துவதை கண்டித்ததால் இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


வில்லியனூர் அருகே மது அருந்துவதை கண்டித்ததால் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புதுச்சேரி மாவட்டம் வில்லியனூர் அருகே உள்ள சிவரந்தகம் காலனி பகுதியை சேர்ந்தவர் அழகன். இவருக்கு பாண்டியன்(25) சேரன்(22) என்று இரு மகன்கள் உள்ளனர்.

இதில் இளைய மகன் சேரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சேரனை, மது அருந்தியதற்காக தந்தை அழகன் கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சேரன் வீட்டில் இருந்த இரும்பு கம்பியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைப் பார்த்த உறவினர்கள் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் காவல்துறையினர் சேரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth commits suicide by hanging after condemning alcohol consumption


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->