புதுச்சேரியில் அளவுக்கு மீறி மது குடித்ததால் தொழிலாளி உயிரிழப்பு.!
worker died for unlimited drunk in puthuchery
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூங்கில்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். இவர் மனைவி சரண்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சரண்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலகுறைவால் உயிரிழந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கோபிநாத் மது பழக்கத்திற்கு அடிமையானார். இதையடுத்து கோபிநாத் மனைவி இறந்த சோகத்தை மறப்பதற்காக தனது குழந்தைகளை தாயிடம் ஒப்படைத்து விட்டு புதுச்சேரிக்குச் சென்றார்.
அங்கு, கூலி வேலை செய்து அதில் வரும் பணத்தில் மது வாங்கி குடித்து வந்தார். தினமும் அளவுக்கு மீறி மது குடித்து வந்த கோபிநாத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அவர் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று தாய் மற்றும் குழந்தைகளை பார்த்து விட்டு மீண்டும் புதுச்சேரிக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று கோபிநாத் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு ஒரு கடை முன்பு தூங்கி கொண்டிருந்த போது நாக்கு வறண்டு பரிதாபமாக உயிரிழந்து போனார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து கோபிநாத்தின் தாய் சங்கரிக்கு தகவல் தெரிவித்தனர். அதன் தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
English Summary
worker died for unlimited drunk in puthuchery