கண்முன்னே உயிரிழந்த கணவர் - நொடியில் மனைவி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


காஜியாபாத்தில் உள்ள வைஷாலி, ஆல்கான் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் அபிஷேக் அலுவாலி - அஞ்சலி தம்பதியினர். திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் இந்தத் தம்பதியினர் டெல்லியில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவுக்கு நேற்று சென்றுள்ளனர். அப்போது அபிஷேக் அலுவாலிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த அவரது உறவினர்கள் அபிஷேக்கை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் இருந்ததால் டெல்லியில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உடனே அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அபிஷேக் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதையடுத்து அபிஷேக்கின் உறவினர்கள் உடலை வீட்டுக்கு கொண்டுவந்தனர். இந்த நிலையில் கணவரின் எதிர்பாராத மரணத்தை தாங்கிக்கொள்ள இயலாத அஞ்சலி, திடீரென குடியிருப்பின் 7வது மாடிக்கு ஓடிச் சென்று, கீழே குதித்தார். 

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அஞ்சலியை மீட்டு வைஷாலியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் மனைவியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman sucide after husband died in kajiyabath


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->