செல்போனா அவ்வளவு பிடிக்கும்.. செல்போன் காணமால் போனதால் பெண் எடுத்த விபரீத முடிவு..!
Woman Committed suicide In Bihar
செல்போன் தொலைந்து போன விரக்தியில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பகுதியை சேர்ந்தவர் பிட்டு சீன் இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். பிட்டு சிங் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த நேரத்தில் அவர் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாய் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாய் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் தந்தைக்கு உடனடியாக இதுகுறித்து தகவல் அளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த விட்டு காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் முதற்கட்ட விசாரணையில் விட்டு சிங்கின் மனைவிக்கு செல்போன்கள் மீது அதிக மோகம் இருந்தது தெரியவந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் அவரது செல்போன் தொலைந்து போனதால் அவர் மிகவும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
English Summary
Woman Committed suicide In Bihar