19வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் 19வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூர் புறநகர் தலகட்டாபுரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் சரிஸ்மா (40). இந்நிலையில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் காணப்பட்ட சரிஸ்மா தனது குடியிருப்பின் 19 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சடைந்த நிலையில், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சரிஸ்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த சரிஸ்மா நேற்று மட்டும் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதும், அதனை அப்பகுதியில் இருந்தவர்கள் தடுத்துதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் சரிஸ்மா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman committed suicide by jumping from the 19th floor in Karnataka


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->