வார இறுதி நேர ஊரடங்கு அமல்.. மேலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.!!
week end lockdown in karnataka
இந்தியா முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும், ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 149 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் மொத்தம் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226 ஆக அதிகரித்துள்ளது என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனாவின் முதலாவது மற்றும் இரண்டாவது அலையின் போது தொற்று விகிதம் 15 நாட்கள் மற்றும் 8 முதல் 10 நாட்கள் ஒருமுறை இரட்டிப்பாகும். ஆனால் தற்போது 1 முதல் 2 தொற்று விகிதம் இரட்டிப்பாவதால் கர்நாடக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 மணி வரை வார இறுதி நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அடுத்த 2 வாரங்களுக்கு பப்கள், கிளப்புகள், உணவகங்கள், பார்கள், ஹோட்டல்கள், திரையரங்குகள், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மற்றும் உள் அரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
English Summary
week end lockdown in karnataka