கொரோனா பரவல் அதிகரித்தால் முகக்கவசம் அணிவது கட்டாயம்.. மஹாராஷ்டிரா துணை முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், தற்போது திடீரென அதிகரித்து வருகிறது. இது கடந்த பிப்ரவரி 24-க்கு பிறகு அதிகமாகும்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மகராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார், மகராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் தொற்று பரவல் அதிகரிக்கும் சூழலில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் மாநிலத்தின் தற்போதைய கொரோனா நிலைமை குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wear mask compulsory in Maharashtra


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->