மீண்டும் புதிய சிக்கல்… காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடி.! தெலுங்கானாவில் பதற்றம்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி பிடித்தது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேவன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். 

இதேபோல் மக்களவைத் தேர்தலிலும் அதே வெற்றியைத் தகவைத்துக் கொள்ள காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளில் 14 வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ் நிர்ணயித்து உள்ளது. 

இந்நிலையில் குடிநீர் பற்றாக்குறை தெலுங்கானாவில் காங்கிரஸுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. மாநிலம் முழுவதும் நீர் நிலைகள் வேகமாக வற்றி வருவதால் காங்கிரஸ் ஆட்சிக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

மாநிலத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர்நிலை நீர் தேக்கம் கொள்ளளவில் குறைந்து கொண்டு இருக்கிறது. இதனால் ஆங்காங்கே குடிநீர் பிரச்சனையை பி.ஆர்.எஸ் கட்சி குற்றச்சாட்டு வருகிறது. இது மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

water issue congress new problem


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->