ரயிலுக்கு காத்திருந்த பயணிகள் பாய்ந்த சரக்கு ரயில் - பலியான உயிர்கள் - குடியரசு தலைவர், பிரதமர் மோடி இரங்கல்! - Seithipunal
Seithipunal


ஒடிசா : பலோர்-புவனேஸ்வர் ரயிலில் ஏறுவதற்கு ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டோங்கோபோசியில் இருந்து சத்ரபூருக்குச் செல்லும் சரக்கு ரயில் தடம் புரண்டது. 

ஜாஜ்பூரில் உள்ள கோரே ரயில் நிலைய நடைமேடையில் இன்று காலை 6.44 மணியளவில் சரக்கு ரயில் தடம் புரண்டததில் 3 பேர் சம்பவ இடையிலேயே பலியாகினர்.

இந்த விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "பீகார் மாநிலம் வைஷாலியில் நடந்த விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். உயிரிழந்தவர்களுக்கு உதவித் தொகையாக ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் " என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "பீகார் மாநிலம் வைஷாலியில் நடந்த சாலை விபத்தில் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நேற்று இரவு மகாராஷ்டிர மாநிலம், புனே - பெங்களூரு நெடுஞ்சாலையில் நவலே பாலம் பகுதியில் டேங்கர் லாரியின் பிரேக் செயலிழந்து விபத்துக்குள்ளானது. 

விபத்தில் டேங்கர் லாரியில் இருந்து கசிந்த எண்ணெய் காரணமாக சுமார் 48 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 30க்கும மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaishali Bihar Train Accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->