கரும்புக் காட்டுக்குள் அல்லேக்காக தூக்கிச் செல்லப்பட்ட சிறுமி.. பின் நிகழ்ந்த கொடூர சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலத்தில் காசியாபாத் பகுதியைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமி கடந்த டிசம்பர் 24 பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். தனது தோழி வீட்டிற்கு படிக்கச் சென்ற அவர் இரவு 7 மணி அளவில் வீட்டிற்கு திரும்பி உள்ளார். தனியாக வந்த அந்த சிறுமியை இரு இளைஞர்கள் சுற்றி வளைத்து கரும்பு காட்டிற்குள் தூக்கிச் சென்றனர். 

அதில் ஒருவரான முஹம்மது கலீம் என்ற 22 வயது இளைஞர் அந்த பெண்ணின் கை கால்களை கட்டி போட்டு கரும்பு காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.  அந்த சிறுமி உதவி கேட்டு அழுத போதும் மற்ற இளைஞர்கள் பொருட்படுத்தாமல் அதை வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தனர். வீடியோ எடுத்துவிட்டு அந்த சிறுமியை மிரட்டி உள்ளனர்.

இந்த விஷயத்தை நீ யாரிடமாவது கூறினால் உன் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று தெரிவித்துள்ளனர் பின் சிறுமி தனது வீட்டிற்கு சென்றவுடன் பெற்றோரிடம் இது குறித்து கூறி அழுதுள்ள நிலையில் அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து முதலில் கலீமை கைது செய்தனர்.

பின் அவரது நண்பர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். இதுபோல சாலையில் செல்லும் பெண்களை வழிமறித்து பாலியல் வன்கொடுமை செய்வதை இவர்கள் ஒரு தொடர் வேலையாக செய்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை இது பற்றி யாரும் புகார் கொடுக்கவில்லையாம். 
இவர்களால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Uttar Pradesh women raped In Sugarcane Garden


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->