#மகாராஷ்டிரா || இருசக்கர வாகனம் இது லாரி மோதி விபத்து.! குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்து உள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் பிரங்குட் பகுதியைச் சேர்ந்த படேல் என்பவர், நேற்று மாலை தன் மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்பொழுது பிரேக் செயலிழந்த லாரி ஒன்று அதிவேகத்தில் சென்ற நிலையில் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படேலின் மனைவி மற்றும் ஆறு மாத குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர். மேலும் அந்த லாரி தொடர்ந்து சென்றதில், மற்றொரு இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த தனாஜி தாமலே என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இந்த விபத்தில் படுகாயம் அடைந்த படேலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Twowheeler lorry accident in Maharashtra


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->