ஜம்மு காஷ்மீர்.! லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த இரண்டு முக்கிய தீவிரவாதிகள் கைது.!
Two Terrorist arrested in Jammu Kashmir
ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த இரண்டு முக்கிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு காஷ்மீரின் சோப்போர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது தீவிரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்காக செயல்பட்டு வந்த ஃபைசன் அகமது மற்றும் முசாமில் ரஷீத் ஆகிய இரண்டு முக்கிய தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடம் இருந்த ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Two Terrorist arrested in Jammu Kashmir