பெற்றோர் பேச்சை கேட்காததால் கண்டிப்பு: சகோதரிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை..! - Seithipunal
Seithipunal


பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த 02 சகோதரிகள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் உதயகிரி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரமணம்மா. இவர்களுக்கு வினிலா (17), அகிலா(16) என 2 மகள்கள். 

மகள் வினிலா சில மாதங்களுக்கு முன்பு காதலித்து வந்த நபருடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை கண்டுபிடித்து புத்திமதிகளை கூறி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

இதையடுத்து,  கடந்த மாதம் வெங்கடேஷ் தனது குடும்பத்தினருடன் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பாலாப்பூர் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார். இந்நிலையில், வினிலாவும், அகிலாவும் பெற்றோரின் பேச்சை சரிவர கேட்காமல் நடந்து கொண்டுள்ளனர். இதனால் இருவரையும், பெற்றோர் கண்டித்துள்ளனர்.

பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து இருந்த இருவரும் நேற்று தங்களது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத பெற்றோர் அதிர்ச்சியடைந்து, சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளனர்.

இதுகுறித்து ஐதராபாத் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 02 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த்துள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பில்போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two sisters upset by parental reprimand commit suicide by hanging


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->