புதுச்சேரி.! மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு.!
Two persons killed in electrocution in Puducherry
புதுச்சேரியில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை எம்.எஸ் அக்ரகாரத்தை சேர்ந்த செல்வி என்பவரின் வீட்டு முன்பு நேற்று மாலை மின் கம்பி அறுந்து விழுந்தது கிடந்துள்ளது.
இதையறியாத செல்வியின் மகன் கணேசன் அதனை மிதித்ததால் மின்சாரம் தாக்கியுள்ளது. கணேசனின் அலறல் சத்தத்தை கேட்ட அவரது சித்தி கணேசனை மீட்க முயன்ற போது அவர் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில் வீட்டில் இருந்தவர்கள் அவர்களை மீட்க முயன்றுள்ளனர்.
இதையடுத்து இவர்களின் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் மீன்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதில் மின்சாரம் பாய்ந்ததில் கணேசன் மற்றும் அவரது சித்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் அவர்களை மீட்க முயன்ற 2 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Two persons killed in electrocution in Puducherry