டியூஷனுக்கு வந்த 10ம் வகுப்பு மாணவனை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த  ஆசிரியை.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மண்ணுஷியில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் அதே பகுதியை சேர்ந்த மாணவனின் நடவடிக்கையில் ஆசிரியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவன் சமீபத்திய தேர்வுகளில் மிகக் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். மேலும் சக மாணவர்களுடன் சரியாக பழகாமல் ஒதுங்கியே இருந்துள்ளார்.

இதனையடுத்து ஆசிரியர்கள் மாணவனுக்கு மனநல ஆலோசனை வழங்கியுள்ளனர். அப்போது  ஆசிரியர் பலமுறை கேள்வி கேட்டாலும், மாணவன் முதலில் எதுவும் கூறவில்லை. இந்த நிலையில், இறுதியில் தன்னை டியூஷன் ஆசிரியை மது கொடுத்து பலாத்காரம் செய்ததாக கடைசியில் கவுன்சலிங் நடத்திய ஆசிரியரிடம் அந்த மாணவன் கூறியுள்ளான்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மண்டுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் டியூஷன் ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். இதில், மாணவனுக்கு மது கொடுத்து பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tution teacher many times raped 10th std student in kerala


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->