கார் குண்டு வழக்கின் நடுக்கம் இன்னும் அடங்காத நிலையில்! – விசாரணை மையத்திலேயே வெடிபொருள் வெடித்து பரிதாபம்! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்காத நிலையில், அதே வழக்கின் விசாரணை புதிய துயரத்தில் முடிந்துள்ளது.பரிதாபாத் பகுதியில் போலீசார் நடத்திய சிறப்பு ரெய்டில் 360 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சர்ச்சைக்குரிய வெடி பொருட்களுக்கு தொடர்புடையதாக புல்வாமாவைச் சேர்ந்த முகமில் ஷகீல் கனியா கைது செய்யப்பட்டார்.பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள், மேலான பரிசோதனைக்காக ஜம்மு–காஷ்மீரின் நவ்காம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.

இதில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டிருந்த வேளையில், திடீரென கொடூரமான வெடிப்பு நிகழ்ந்தது.இந்த துயர வெடிவிபத்தில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் இணைந்து 9 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.கடுமையாகக் காயம் அடைந்த 27க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உயிர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் நிலவுகிறது.

ஏற்கனவே நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கார் குண்டு தாக்குதலுக்கு அடுத்தே, விசாரணை நடந்து வரும் நிலையிலேயே ஏற்பட்ட இந்த புதிய பெரும் வெடிவிபத்து, பாதுகாப்பு அமைப்புகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குற்றச் செயலின் முழு பின்னணி, தொடர்புடைய வலையமைப்புகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tremors car bomb case still unabated It pity that explosives exploded interrogation center


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->