நாசிக் மருத்துவமனை லிப்ட் துவாரத்தில் தலை சிக்கி பெண் ஊழியர் உயிரிழந்த துயரம்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிகழ்ந்த கோரமான விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு அறுவை சிகிச்சை பிரிவில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்த 50 வயதான ஜோதி சிவாஜி, எதிர்பாராத விதமாக லிப்ட் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

அறுவை சிகிச்சைக்கான கருவிகளைக் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் பிரத்யேகச் சரக்கு லிப்ட் (Service Lift) அருகே ஜோதி வந்தபோது இந்தத் துயரம் நேர்ந்துள்ளது. லிப்ட் எங்கே இருக்கிறது என்பதைச் சோதிப்பதற்காக அவர் லிப்ட் துவாரத்தின் வழியே குனிந்து கீழ் நோக்கிப் பார்த்துள்ளார். அந்தத் தருணத்தில் மேலிருந்து கீழே இறங்கி வந்த லிப்ட், எதிர்பாராத விதமாக அவரது தலையை நசுக்கி உள்ளே சிக்க வைத்தது.


இதனைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள் அவரை மீட்க நீண்ட நேரம் போராடினர். சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக அவரது தலையை வெளியே எடுக்க முடியாத நிலை நீடித்தது. பின்னர் தொழில்நுட்ப நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மிகுந்த சிரமத்திற்குப் பிறகு அவர் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், லிப்ட் பலமாகத் தாக்கியதில் அவரது நரம்பு மண்டலம் மற்றும் தண்டுவடம் (Spinal Cord) கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragic Lift Accident in Nashik Hospital Worker Dies After Being Trapped in Elevator Shaft


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->