பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் கூட்டம்.!!
today union ministers meeting
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.
இதனால், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து தாக்க முயற்சித்தது. ஆனால், இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது.

இதையடுத்து இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 10-ந்தேதி அறிவித்தார். இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்தன.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. டெல்லியில் காலை 11 மணிக்கு ஆரம்பமாகும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.
English Summary
today union ministers meeting