சிறுமி படுகொலை - புதுவையில் இன்று பொதுமுடக்கம்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலம் சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஆர்த்தி கடந்த சனிக்கிழமை மாயமானார். இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் காணாமல் போன சிறுமி 3 நாட்களுக்கு பிறகு வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 

இதையடுத்து போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில், விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அப்பகுதியை சேர்ந்த கருணாஸ் என்பவர் தனியாக வசிக்கும் விவேகானந்தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும், அப்போது அவர் இறந்ததால், கை, கால்களை கட்டி கால்வாயில் வீசியதும் தெரிய வந்துள்ளது. 

இதைத் தொடர்ந்து போலீசார் குற்றவாளிகள் இருவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையை கண்டித்து புதுச்சேரியில் இந்தியா கூட்டணி மற்றும் அதிமுக சார்பில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரைபொதுமுடக்கம் 
 
இன்று பந்த்தை முன்னிட்டு, புதுச்சேரியில் கடைகள் இயங்காது. பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது. மேலும், சிறுமி கொலையை கண்டித்து, வணிகர்கள், பேருந்து உரிமையாளர்கள், தாங்களாகவே  முன்வந்து பந்த்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today bandh in puthuchery for girl murder issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->