மயக்க நிலையில் குப்பைத்தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் பெரும் சோகம்..!
Tiruppur Unconscious Recued child Issue Mother Arrest
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தண்டுகாரன்பாளையம் பகுதியில், கடந்த மாதம் 25 ஆம் தேதியில் சிறுமி மயக்க நிலையில் குப்பை தொட்டியில் இருந்துள்ளார். இவரை மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதி செய்யவே, காவல் துறையினருக்கு இது குறித்த தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்களின் அடிப்படையில், அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிய பெண்ணை காவல் துறையினர் விசாரணை செய்துள்ளனர். இதன்போது, அவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை சார்ந்த 39 வயது மருத்துவர் சைலஜா குமாரி என்றும், சிறுமி அவரின் குழந்தை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சைலஜா, வேலை தேடி குழந்தையுடன் திருப்பூருக்கு வந்துள்ளார். இதன்போது, மகள் அவிநாசி அருகே வாந்தி எடுத்ததால் பாதி வழியில் இறங்கிய நிலையில், குடும்ப பிரச்சனை மற்றும் பணப்பிரச்னையால் நடுத்தெருவில் நிற்கிறோமே என்று எண்ணி மனவிரக்தியில் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதனால், தான் கையில் வைத்திருந்த சளி மருந்தை குழந்தைக்கு முழுவதுமாக கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமி மயங்கிய நிலையில், அருகே உள்ள குப்பை தொட்டியில் குழந்தையை போட்டுவிட்டு, எலிமருந்தை சாப்பிட்டு சைலஜாவும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதன்பின்னர் எங்கு செல்வது என்று தெரியாமல் அப்பகுதியிலேயே சுற்றி வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சைலஜாவை கைது செய்த காவல் துறையினர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். சிறுமியை மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். தற்போது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவே, மருத்துவர் சைலஜாவின் மீது கொலை வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruppur Unconscious Recued child Issue Mother Arrest