மும்பை || துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த 3 மாணவர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


மும்பை || துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த 3 மாணவர்கள் கைது.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பகுதியைச் சேர்ந்தவர்கள் கவுரவ் வாகல், ஸ்ரேயாஸ் சூரி மற்றும் அபிஷேக் மங்கோங்கர். இவர்கள் மூன்று பேரும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு காரில் உணவு சாப்பிடுவதற்காகச் சென்றனர். 

அப்போது, அவர்கள் தெரியாத விதமாக மும்பை துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்துள்ளனர். அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவர்களது காரை வழிமறித்து சோதனை செய்தனர். 

உடனே அந்த மாணவர்கள் காரை வேகமாக செலுத்தி தொழில் பாதுகாப்பு படையினரின் பிடியில் இருந்து தப்பித்துச் சென்றனர். அந்த நேரத்தில், சோதனை பணியில் இருந்த அதிகாரி ஒருவரின் 20 தோட்டாக்கள் அடங்கிய கேட்ரிட் அவர்களின் காருக்குள் தவறி விழுந்துவிட்டது. 

இது தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் எல்லோ கேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் படி, போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய வாலிபர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர். மேலும் அவர்களின் காரில் இருந்த தோட்டாக்களையும் மீட்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three students arrested for go to mumbai port ban place


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->