மும்பை || துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த 3 மாணவர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


மும்பை || துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த 3 மாணவர்கள் கைது.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பகுதியைச் சேர்ந்தவர்கள் கவுரவ் வாகல், ஸ்ரேயாஸ் சூரி மற்றும் அபிஷேக் மங்கோங்கர். இவர்கள் மூன்று பேரும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு காரில் உணவு சாப்பிடுவதற்காகச் சென்றனர். 

அப்போது, அவர்கள் தெரியாத விதமாக மும்பை துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்துள்ளனர். அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவர்களது காரை வழிமறித்து சோதனை செய்தனர். 

உடனே அந்த மாணவர்கள் காரை வேகமாக செலுத்தி தொழில் பாதுகாப்பு படையினரின் பிடியில் இருந்து தப்பித்துச் சென்றனர். அந்த நேரத்தில், சோதனை பணியில் இருந்த அதிகாரி ஒருவரின் 20 தோட்டாக்கள் அடங்கிய கேட்ரிட் அவர்களின் காருக்குள் தவறி விழுந்துவிட்டது. 

இது தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் எல்லோ கேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் படி, போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய வாலிபர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர். மேலும் அவர்களின் காரில் இருந்த தோட்டாக்களையும் மீட்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three students arrested for go to mumbai port ban place


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->