சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபரை தாக்க முயன்ற பொதுமக்கள் - மூன்று போலீசார் படுகாயம் - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்காவ் மாவட்டம் பாண்ட் காவ் கிராமத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ஒருவர் கடந்த மாதம் 30 ஆம் தேதி திடீரென காணாமல் போய் உள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் தீவிர விசாரணை நடத்தி கடந்த 1ம் தேதி சிறுமியை பிணமாக மீட்டனர்.  அப்போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக  போலீசார் 19 வயது வாலிபரை கைது செய்தனர். இந்த நிலையில் போலீசார் நேற்று அந்த வாலிபரை சம்பவ நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த வாலிபரை தாக்க முயன்றனர்.

இதனை போலீசார் தடுக்க முயன்றதால் பொதுமக்கள் காவல் வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினர். இந்த தாக்குதலில் போலீஸ் வாகனங்கள் சேதம் அடைந்ததுடன் மூன்று போலீசார் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 அதன் பின்னர் போலீசார் வாலிபரை பொதுமக்களிடமிருந்து மீட்டு அழைத்துச் சென்றனர். பின்னர் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த போலீசார்களையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three police officers injured for peoples attack in maharastra


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->