மதுரையில் சோகம் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை.!
three peoples sucide in madurai
மதுரை மாவட்டத்தில் உள்ள நரிமேடு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர்கள் காளிமுத்து - ஜாக்குலின் ராணி தம்பதியினர். இவர்களுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் மதுமதி என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் ஜாக்குலின் ராணிக்கு பிறந்தநாள் என்பதால், காளிமுத்து தன் மனைவி மற்றும் குழந்தையுடன் கேக்வெட்டி கொண்டாடியுள்ளனர்.
ஆனால், நேற்று மதியத்துக்கு மேல் பூட்டிய வீட்டுக்குள் ஜாக்குலின் மற்றும் அவரது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையறிந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

அதன் படி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தாய், மகள் இருவரும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்த படி இருந்துள்ளனர். உடனே போலீஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, காளிமுத்து கூடல்நகர் ரயில் நிலையம் மற்றும் சமய நல்லூருக்கு இடையில் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த நிலையில் கிடந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரின் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three peoples sucide in madurai