ஆந்திரா : திடீரென இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம் - மூன்று பேர் பலி.! - Seithipunal
Seithipunal


ஆந்திரா பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ராமஜோகி பேட்டையில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்தக் கட்டிடத்தில் ஏராளமானோ குடியிருந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் படி, போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களையும், படுகாயமடைந்தவர்களின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென அடுக்குமாடு கட்டிடம் இடந்து விழுந்தது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples died for building collapse in andira vishakapattinam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->