ஹோலி பண்டிகையில் வெளிநாட்டு பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மூன்று பேர் கைது.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள வடமாநிலங்களில் கடந்த 8-ம் தேதி வியாழக்கிழமை ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த ஹோலி பண்டிகையின் போது மக்கள் வண்ண பொடிகளைத் தூவியும் தண்ணியை ஊற்றியும் மிக கோலாகலமாக கொண்டாடினார்கள். 

இவர்களுடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ள வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இணைந்து ஹோலி பண்டிகையை மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள்.

இந்த நிலையில், நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள பகர்கஞ்ச் பகுதியில் உள்ளூர்வாசிகளும், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அப்போது, சில இளைஞர்கள் ஜப்பானை சேர்ந்த பெண் சுற்றுலா பயணியின் மீது முட்டையை வீசி பாலியல் ரீதியில் அத்துமீறியுள்ளனர். இதனால், அந்த பெண் தன்னிடம் அத்துமீறிய ஒரு இளைஞனை கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் பரவி வைரலாகி உள்ளது. 

இந்த சம்பவம் குறித்த பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணி புகார் அளிக்கவில்லை. இருப்பினும், டெல்லி போலீசார் சமூகவலைதளத்தில் வைரலான வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து வெளிநாட்டு பெண் பயணியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சிறுவன் உள்பட மூன்று பேரை கைது செய்தனர். 

அதேசமயம், பாதிக்கப்பட்ட அந்த வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி தற்போது வங்காளதேசம் சென்றுவிட்டதாகவும், அவர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தற்போது நலமாக என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three peoples arrested for sexual harassment to jappan tourists in holi festival


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->