கழிவு நீர் குழாய் பொருத்தும் போது மண்சரிவு.! 3 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலி.! - Seithipunal
Seithipunal


அரியானா மாநிலத்தில் கழிவுநீர் குழாய்களை பொருத்தியபோது திடீரென ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 3 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டம் கப்ரோ கிராமத்தில் உள்ள இந்த்ராஜ் பூங்கா அருகே கழிவுநீர் குழாய்கள் பொருத்தும் பணி நடந்து கொண்டிருந்தது. இதற்காக 10 அடிக்கும் கீழே பீகாரை சேர்ந்த மூன்று புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கழிவு நீர் குழாய்கள் பொருத்தும் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது திடீரென முன்சரிவு ஏற்பட்டதால் மூன்று பேரும் மண்ணில் சிக்கி புதைந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், கனரக மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை மீட்டனர்.

இந்த விபத்தில் பலியானவர்கள் பீகாரைச் சேர்ந்த பல்ஜீத், சந்தோஷ் மற்றும் சனோஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Three migrant labourers killed while fitting sewage pipes in haryana


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->