வாலிபரை அறிவாளால் வெட்டிக் கொன்ற மர்மகும்பல்.! போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் வாலிபரை அறிவாளால் வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள துடிநீர் பகுதியை சேர்ந்த முகது கவுஸ் என்பவரின் மகன் சலீம்(26). இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த மர்மநபர்கள், சலீமை வழமறித்து அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்கள், சலீமை அறிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த சலீம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சளிமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சலீமை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The mysterious gang murder the young man in Karnataka


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->