ஸ்ரீகாளஹஸ்தி உள்பட10 கோயிலுக்கு கலப்பட நெய் சப்ளை: நீதிமன்றத்தில் ஆதாரத்தை சமர்ப்பித்துள்ள விசாரணை குழு..!
The investigation team has submitted evidence to the court regarding the case of supplying adulterated ghee to 10 temples including Srikalahasti
திருப்பதி ஏழுமலையான் கோயிலை போல் ஸ்ரீகாளஹஸ்தி உள்பட மேலும் 10 கோயிலுக்கு கலப்பட நெய் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆதாரத்தை சமர்பித்துள்ளனர்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிபிஐ இயக்குனர் தலைமையிலான விசாரணைக் குழு, விசாரணை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு கலப்பட நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனம், ஸ்ரீகாளஹஸ்தியை சேர்ந்த வைஷ்ணவி டெய்ரி, உத்தரபிரதேசத்தை சேர்ந்த போலோ பாபா டெய்ரி நிறுவனத்தினரை கைது செய்து சிறையில் அடைத்தது.

இவ்வழக்கில் தொடர்புடைய போலோ பாபா டெய்ரி நிறுவனத்தின் பொது மேலாளர் ஹரி மோகன் ரானாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் அவர் திருப்பதி மற்றும் ஆந்திராவில் உள்ள பல பால் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
அதில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில், காணிப்பாக்கம் விநாயகர் கோயில், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி சிவன் கோயில், விஜயவாடா கனகதுர்க்கை அம்மன் கோயில் உள்ளிட்ட 10 கோயில்களுக்கு கலப்பட நெய் சப்ளை செய்துள்ளதாக கூறி, அதற்குண்டான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர். இதனையடுத்து ஹரி மோகன் ரானாவின் ஜாமீன் வழங்குவது ரத்து செய்யப்பட்டது.

இந்த கலப்பட நெய் பெறப்பட்டமை தொடர்பில் சிறப்பு விசாரணை குழு வழங்கும் அறிக்கை பொருத்து அமைய உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த விசாரணை நடைபெறுவதால், விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் அதிகாரிகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
The investigation team has submitted evidence to the court regarding the case of supplying adulterated ghee to 10 temples including Srikalahasti