திருமண வாக்குறுதி கூறி பாலியல் உறவு..ஆணுக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் உறவு வைத்து, பின்னர் மிரட்டியதாக கூறி திருமணமான பெண் ஒருவர் அளித்த புகாரில், கேரள உயர்நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

திருமண வாக்குறுதியின் அடிப்படையில், திருமணமான பெண்ணிடம் பாலியல் உறவு வைத்த நபருக்கு, கடுமையான குற்றச்சாட்டு செல்லாது எனவும், ஜாமினும் வழங்கப்பட்டது.

திருமணமான பெண் ஒருவர், ஆண் ஒருவர் திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதி அளித்து,பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்,₹2.5 லட்சம் கடன் பெற்று,தனது புகைப்படத்தை வெளியிட மிரட்டினார் எனவும் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கக்கூடிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து 
ஜூன் 13 அன்று குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்."இந்நிலையில், சம்மதத்துடன் ஏற்பட்ட உறவா அல்லது வஞ்சனை காரணமானதா என்பது தீர்மானிக்க இயலாது," என நீதிமன்றம் குறிப்பிட்டது.

"திருமணமான பெண், மற்றொருவருடன் உடலுறவில் ஈடுபடும்போது, இருவரும் ஒன்றுக்கொன்று திருமணத்திற்குப் பிறகு இருப்பதை அறிந்திருந்தால், திருமண வாக்குறுதிக்கு இடமில்லை" என நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இது இந்த வழக்கிற்கே மட்டும் பொருந்தும் தீர்ப்பாக இருக்கும் என்றும், ஒவ்வொரு வழக்கும் தனிச்சூழ்நிலையை பொறுத்தது என்றும் கூறினார்.குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு கடைசியில் ஜாமின் வழங்கப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The High Court granted bail to a man for engaging in sexual relations after giving a marriage promise


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->