தீவிரவாதிகளின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை.. காஷ்மீரில் தீவிரவாதிகள் இல்லாத மாவட்டமாக மாறிய மாவட்டம்.!!
terrorist commander shot death
ஜம்மு-காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் இன்று தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த தாக்குதலில் தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தெற்கு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சேர்ந்து இன்று அதிகாலை குல் சோஹர் பகுதியை சுற்றிவளைத்தனர்.
அப்போது பாதுகாப்பு படை வீரர்களை கண்டதும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படை வீரர்களும் துப்பாக்கி சூடு நடத்தினர். இரு தரப்பினரும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் இருவர் தீவிரவாதிகள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்றும் ஒருவர் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி மசூத் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
terrorist commander shot death