டெல்லியில் பயங்கர தீ விபத்து..7 பேர் உடல்கருகி பலி.!
Terrible fire accident in Delhi 7 people burnt to death
வடக்கு தெற்கு டெல்லி கோகுல்புரி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் வரிசை தீப்பற்றி எரிவதை கண்டு அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். அதற்குள் தீ வேகமாகப் பரவி சுமார் 30 குடிசைகள் கொளுந்துவிட்டு எரிந்தது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் தீவிர முயற்சிக்கு பிறகு அதிகாலை 4 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையில் நடத்தப்பட்ட மீட்பு பணியில் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்த 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
English Summary
Terrible fire accident in Delhi 7 people burnt to death