பாராட்டு விழா - இந்திய அணியை வரவேற்கத் சென்ற ரசிகர்களில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதி.!  - Seithipunal
Seithipunal


ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி போட்டியில் விளையாடி, கோப்பையை வென்று அசத்தியது. ரோகித் சர்மா தலைமையில் சுமார் 17 வருடங்கள் கழித்து, இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் நேற்று டெல்லி வந்தடைந்தனர். அங்கு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் மும்பையில் பேரணியாக, திறந்த நிலையிலான பேருந்தில் டி20 உலகக்கோப்பையுடன் வலம் வந்தனர். அவர்களை காண்பதற்காக, லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

மும்பையின் மரைன் டிரைவ் பகுதியில் இருந்து பேரணியாக வான்கடே மைதானத்திற்கு வீரர்கள் வந்ததும் கூடியிருந்த ரசிகர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். அங்கு அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது பி.சி.சி.ஐ. வீரர்களுக்கு ரூ.125 கோடிக்கான காசோலையை வழங்கியது. 

இதற்கிடையே இந்திய கிரிக்கெட் அணியை வரவேற்க சென்றதில் பல்வேறு ரசிகர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்பட்டது. இதுவரைக்கும் 10 பேர் அருகேயுள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் 2 பேரில் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மற்றொரு நபருக்கு சுவாச பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வீரர்களை வரவேற்கத் சென்ற போது ரசிகர்கள் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ten indian team fans admitted hospital in mumbai


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->