தெலுங்கானாவில் நடுரோட்டில் பைக்கு தீ வைத்த வியாபாரி.. இது தான் காரணமா?..!
telangana man sets bike on fire
தொடர்ந்து அபராதம் விதித்து வந்ததால் விரக்தியில் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் அடிலாபாத் பகுதியை சேர்ந்தவர் மக்பூல். வியாபாரயான இவர் இன்று மதியம் பஞ்சாப்சவுக் சாலையில் தனது இருசக்கர வாகனத்தை காவலர்கள் முன் தீவைத்தார்.
இதனை கண்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து மக்பூல் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.
இந்நிலையில், இன்றும் எனக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். நான் வேலை விஷயமாக செல்கிறேன் பின்னர் செலுத்துகிறேன் என கூறியும் அவர்கள் கேட்கவில்லை. காவல்துறையினர் ஏதோ உள் நோக்கத்துடன் அபராதம் விதிக்கின்றனர்.
இதனால், எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இரு சக்கர வாகனம் இருந்தால் தானே இது போன்ற சம்பவங்கள் ஏற்படும் என நினைத்து இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தியதாக தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
telangana man sets bike on fire