தெலுங்கானா கோர விபத்து! பேருந்து அடியில் சிக்கி நசுங்கிய ஆட்டோ! துடிதுடித்து இறந்த பள்ளி மாணவி! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ, பேருந்து மீது மோதிய விபத்தில், பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

பரபரப்பாக இயங்கி வரும் ஹைதராபாத் மாநகரின் ஹப்சிகுடா பகுதியில், இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ, பேருந்தில் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானதில், ஆட்டோ அப்பளம் போல நசுங்கியது. 

இதில் ஓட்டுநர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் ஆட்டோவில் இன்னும் எத்தனை மாணவிகள் சிக்கியிருந்தார்கள் என்பதை கண்டுபிடிக்கவே சுமார் இரண்டு அரை மணி நேரத்துக்கு மேல் ஆகியது. இதில் பத்தாம் வகுப்பு படிக்கக்கூடிய சாத்விகா என்ற பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் தெரிவிக்கையில், ஆட்டோவின் பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து, ஆட்டோ மீது மோதியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை எழுந்த ஆட்டோ, முன்னாள் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது அதிவேகத்தில் மோதி, பேருந்தின் உள்ளே அப்பளம் போல் நசுங்கி சிக்கி உள்ளது. 

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த மேலும் இரண்டு பள்ளி மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Telangana hyderabad auto bus accident


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->