மத்திய பிரதேசம் : 5 வயது சிறுமியை கொடூரமாக தாக்கி கையை உடைத்த ஆசிரியர் கைது.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் கிளி என்ற வார்த்தையை சரியாக உச்சரிக்காததால், 5 வயது சிறுமியை கொடூரமாக தாக்கி, கையையும் உடைத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகர் ஹபீப்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட ஜந்தா காலனியில் வசிக்கும் பிரயாக் விஸ்வகர்மா (20) என்பவர் அதே பகுதியில் டியூஷன் எடுத்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி தங்களது ஐந்து வயதுடைய பெண் குழந்தையை டியூஷனுக்கு அனுப்பினர்.

அப்பொழுது வகுப்பில் சிறுமி 'கிளி' என்ற வார்த்தையை சரியாக உச்சரிக்காததால், ஆத்திரமடைந்த ஆசிரியர் அந்த சிறுமியை கொடூரமாக தாக்கி சிறுமியின் கையையும் உடைத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பெற்றோர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆசிரியரை கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher arrested for breaking 5 year old girl hand in madhya pradesh


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->