சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் ரூ.37,600 கோடி பணம்! மூன்று மடங்காக உயர்ந்த கருப்பு பணம்!
Swiss bank Indian money
இந்தியாவின் பல கோடீஸ்வரர்களும் நிறுவனங்களும் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணிசமான அளவிலான பணத்தை வைத்துள்ளனர். பெரும்பாலும் இது இந்தியாவில் கருப்பு பணமாகக் கருதப்பட்டாலும், சுவிட்சர்லாந்து அதிகாரிகள் இதை சட்டப்படி சரியான பணமாகவே நினைக்கின்றனர்.
சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்ட புதிய தரவுகளின்படி, கடந்த ஆண்டில் இந்தியர்களின் சொத்து மதிப்பு 3.5 பில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.37,600 கோடி) ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இருந்த 1.04 பில்லியன் பிராங்குடன் ஒப்பிட்டால் மூன்றிரட்டியாக அதிகரித்துள்ளது.
இந்த தொகையில் பெரும்பகுதி பணம் வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் கணக்குகளாகும். தனிநபர்களின் நேரடி டெபாசிட்கள் வெறும் 11% மட்டுமே. அதாவது, சுமார் 346 மில்லியன் சுவிஸ் பிராங்க் (ரூ.3,675 கோடி) அளவில் மட்டுமே தனிநபர் பணமாக உள்ளது.
இந்த அளவு 2021க்கு பிறகு அதிகரித்துள்ள முக்கியமான வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. அந்த ஆண்டில் 3.83 பில்லியன் சுவிஸ் பிராங்க் இருந்தது. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் அதிகபட்ச வைத்துப் பணம் 2006-ல் 6.5 பில்லியன் சுவிஸ் பிராங்க் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் சீரான சரிவும், சில ஆண்டுகளில் சிறிய உயர்வும் காணப்பட்டது.