உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய உத்தரப் பிரதேச அரசு: கண்டனத்துடன், ரூ. 5 லட்சம் அபராதம்..!
Supreme Court imposes Rs 5 lakh fine on Uttar Pradesh government for not releasing prisoner on bail
உத்தரப் பிரதேச அரசுக்கு ரூ. 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ள உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் சிறையில் உள்ள குற்றவாளி ஒருவருக்கு கடந்த மாதம் விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஆனால், வழக்கின் துணை பிரிவை காரணம் காட்டி கைதியை சிறை அதிகாரிகள் விடுவிக்கவில்லை. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி கைதியை ஜாமீனில் விடுதலை செய்யாத அரசுக்கு அபராதம் விதித்துள்ளது.
குறித்த வழக்கை நீதிபதி விஸ்வநாதன் அவர்வின் விசாரணையின் போது, உத்தரப்பிரதேச சிறைத்துறை டிஜிபி சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, சிறைத்துறை டிஜிபி காணொளி மூலம் ஆஜரான நிலையில், சிறை கண்காணிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார்.

இதன் போது நீதிமன்ற உத்தரவுப்படி கைதியை விடுவிக்க மறுத்ததற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அப்போது, கைதி நேற்று விடுவிக்கப்பட்டதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது போன்று எத்தனை பேர் இன்னும் சிறையில் உள்ளனர் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
விசாரணை முடிவில், உத்தரப்பிரதேச சிறைத்துறை கண்காணிப்பாளருக்கு ரூ.5 லட்ச அபராதம் விதித்து, அதனை நாளைக்குள் பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
Supreme Court imposes Rs 5 lakh fine on Uttar Pradesh government for not releasing prisoner on bail