நள்ளிரவில் திடீர் தீ விபத்து; 2 பேர் உடல் கருகி பலி!
Sudden fire accident at midnight 2 people burned to death
டெல்லியில் இ-ரிக்சாக்களை சார்ஜிங் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலையே உடல் கருகி பலியாகி உள்ளனர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன் டெல்லியின் ஷாதரா பகுதியில் இ-சார்ஜிங் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கி 2 வாலிபர்கள் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.இந்தநிலையில் அதேபோல மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.டெல்லி தில்ஷாத் கார்டன் பகுதியில், கொடி காலனியில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அப்போது விரைத்து வந்து உடனடியாக தீயை அணைக்கும் பணியை தீயணைப்பு துறையினர் மேற்கொண்டனர்.
தீயை அணைத்த பின்னர், 2 இ-ரிக்சாக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து போயிருந்தது தெரிய வந்தது.இந்த தீ விபத்து சம்பவத்தில், 2 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ஒருவர் 24 வயது வாலிபர். மற்றொருவர் 60 வயது முதியவர். இ-ரிக்சாக்களை சார்ஜிங் செய்தபோது, தீ விபத்து ஏற்பட்டு இருக்க கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, இந்த தீ விபத்து குறித்து போலீசார் இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி தீயணைப்பு துறை அதிகாரி அனுப் சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, நாங்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டோம்.இந்த தீ விபத்து சம்பவத்தில், 2 பேர் பலியாகி உள்ளனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறினார்.
English Summary
Sudden fire accident at midnight 2 people burned to death